மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்பை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதில் வன விலங்குகளுக்கு தடை ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே பாதுகாப்பிற்காக கம்பிவேலிகள் அமைத்துள்ளனர் இதில் ஒரு சிலர் சட்டவிரோதமாக பாதுகாப்பு வெளியில் உயர் மின்னழுத்த தொடர்பை கொடுத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான கரும்பு காட்டிற்குள் நுழைய முயன்ற 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயர் மின்னழுத்த மின்வெளியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுக்கள் உயிரிழந்த யானையை உடற்கூறு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆய்வு செய்த பின் யானையை புதைக்கப்பட்டது. இதனையெடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தலைமறைவான கருப்பசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.