நீர் நிலைகளை பராமரித்து, பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடி மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய அளவிலான முதலாவது நீர்வளத்துறை மாநாடு மத்தியபிரதேச மாநில போபாலில் தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நமது அரசியலமைப்பு சட்டத்தில், தண்ணீர் மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. நீர் பாதுகாப்பிற்கான மாநிலங்களின் முயற்சிகள் நாட்டின் கூட்டு இலக்குகளை அடைவதில் நீண்ட தூரம் செல்லும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீர் பாதுகாப்பில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. 2047ம் ஆண்டிற்கான நமது நீர் பார்வை நாம் 100வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் போது பெரும் பங்களிப்பாக இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த சரோவர்களைக் கட்டுவதற்கு தேசம் ஒன்றிணைந்து செயல்படுகிறது. இதுவரை 25,000 அமிர்த சரோவர்கள் கட்டப்பட்டுள்ளன.ஜியோசென்சிங், ஜியோமேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களை நீர் சேமிப்புத் துறையில் பயன்படுத்த வேண்டும். தொழில் மற்றும் விவசாயம் என்பது தண்ணீர் தேவைப்படும் இரண்டு துறைகள். ஜல் ஜீவன் மிஷன் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவதற்கான வளர்ச்சி அளவுகோலாக மாறியுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நீர் நிலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டால் வேளாண்துறை வேகமாக வளர்ச்சி பெறும். நீர் ஆதாரங்களை வலுப்படுத்தி சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும். மாநில அரசுகள் தொடர்ந்து மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.