இந்தியாசெய்திகள்

மஹுவா மொய்த்ராவின் வழக்கு – ஜன. 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஜன. 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிராநந்தனியுடன் தனது நாடாளுமன்ற இணையதள உள்நுழைவைப் பகிர்ந்து கொண்டதாகவும்,  அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து புகாரளித்த நிஷிகாந்த் துபே மற்றும் புகாருக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா ஆகியோரை நேரில் அழைத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் ஹிரா நந்தனியிடம் பணம்,  பரிசு பொருட்களை பெற்று கொண்டு அவரை தனது நாடாளுமன்ற கணக்கின் உள்நுழைவின் மூலம் கேள்வி எழுப்ப அனுமதித்ததாக கூறப்படுகிறது.  இதற்காகவே  மஹுவா மொய்த்ரா தன் இணையதள விபரம்,  பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை அவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டது.  இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்தது.

பின்னர், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். தொடர்ந்து, தனது மனுவை விசாரிக்க டிச. 13 அல்லது டிச. 14 ல் பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கானது இன்று(வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி முன்பாக விசாரணைக்கு வந்தது.

மஹுவா மொய்த்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார்.
முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை ஜன. 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து மாணவர்களுக்கான சிறந்த முடிவு: பிரதமர் மோடி

டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்கக் கோரி முதல்வர் உத்தரவு!

Gayathri Venkatesan

‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading