மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நோட்டம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வனப்பேச்சியம்மன், சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நோட்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வனப்பேச்சி அம்மன் மற்றும் சீலக்காரியம்மன் திருக்கோயில்.இக்கோயிலில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மேலும் கோயிலில் புதியதாக 21அடி உயரத்தில் கோபுரம் எழுப்பபட்டுள்ளது. இப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததையொட்டி நேற்று கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக அரங்கேறியது. அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.இவ்விழாவில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வேந்தன்