நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.…

ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஹெத்தையம்மன் கோயில் திருவிழா நீலகிரி மாவட்டத்தில் வரும் டிச.27-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்தும், பாரம்பரிய பாடலுக்கு நடனமாடியும் ஹெத்தை அம்மனை வழிபடுவார்கள். 

இதையும் படியுங்கள் : ‘அயலான்’ படத்தில் இணைந்துள்ள பிரபலம் யார் தெரியுமா?

இதையெடுத்து, ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 6-ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.