நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் கடைசி நாளான இன்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் விடுபட்ட மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார்.
ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதேபோல பிப்.5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை எனவும், பிப்.7ம் தேதி மனுவை வாபஸ் பெற இறுதி நாள் என்றும் அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிப்ரவரி 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று வேட்புமனுக்கள் மீதனா பரிசீலனை தொடங்கியது.
இந்நிலையில், மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்கு, 74 ஆயிரத்து 416 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 14 ஆயிரத்து 701 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 23 ஆயிரத்து 354 பேரும், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 36 ஆயிரத்து 361 பேரும் மனுதாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் கடைசி நாளான இன்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.