நாகை அருகே இருசக்கர வாகனத்திற்குள் சிறு அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி நூதன முறையில் சாராயம் கடத்திய ஒரு இளஞ்சிரார் உட்பட 5 பேர் கைது; சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம்
கடத்தி வரப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை
செய்யப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர்
ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் வெளி மாநில மதுப்பாட்டில்கள் கடத்தல் மற்றும்
சாராய விற்பனையை தடுக்க பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனி படை போலீஸார் நாகூர் வெட்டாறுபாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்திற்குள் நூதன முறையில் சீட்டுக்கு கீழே புதுச்சேரி மதுபான
பாட்டில்கள் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து 90ML அளவு கொண்ட 250 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் பாண்டி சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 3 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மது கடத்தலில் ஈடுபட்ட வாஞ்சூர் பகுதியை சேர்ந்த இளையராஜா, தேவூரை சேர்ந்த ராம்குமார், வெளிப்பாளையத்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
அதேபோல் நரிமணம் பாலம் அருகில் நடைபெற்ற சோதனையில் புதுச்சேரியில் இருந்து
சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 500 பாக்கெடுகளில் கடத்திவரப்பட்ட பாண்டி
சாராயமும், மற்றும் மூட்டையில் இருந்த 50 லிட்டர் பாண்டி சாராயமும், சாராயம்
கடத்தி வந்த இரண்டு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும்
சாராயக்கடலில் ஈடுபட்ட செல்லூரைச் சேர்ந்த நித்தீஸ் மற்றும் ஒரு இளஞ்சிரார்
உட்பட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நாகூர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் சாராயம் மூட்டை மற்றும் இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இதுபோல தொடர் குற்ற சம்பவங்கள் ஈடுபடும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ம. ஸ்ரீ மரகதம்







