தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500க்கும் கீழ் குறைந்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,36,262 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 11 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,915 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 8,229 பேர் குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 33,56,648 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 41,699 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 6,554 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 5,937 பேருக்கும், செங்கல்பட்டில் 3,603 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.







