இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,341 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.45…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.45 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,75,649 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,23,354 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 11.99 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1.26 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 16,79,740 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.