கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்!

பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5பேர் படுகாயம் அடைந்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது. அதனைதொடர்ந்து  இரவு சாமி…

பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5பேர் படுகாயம் அடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில்
பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது. அதனைதொடர்ந்து  இரவு சாமி ஊர்வலத்தில் வைத்த பட்டாசு வெடிக்கப்பட்டது.

இதில் பட்டாசுபொறிகள் மினி சரக்கு வாகனத்தில் ஏற்கனவே வைத்திருந்த பட்டாசுக்களின் மீது விழுந்ததில் மளமளவென பட்டாசுக்கள் வெடிக்க தொடங்கியதில் பக்தர்கள் பதறி அடித்து ஓடத் துவங்கினர்.

இச்சம்பவத்தில் கருப்பாயிகொட்டாயை சேர்ந்த விஜயகுமார் (21) பரசுராமன் (20 ) யாசிகா (6) பிரதிக்க்ஷா (7) தர்ஷன் (6) உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னா் இவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.