30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐஜி சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் உறவினரான விவேக் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், கோடநாடு எஸ்டேட்டின் மற்றொரு உரிமையாளரான சசிகலாவிடம் நாளை தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். கோடநாடு எஸ்டேட்டில் காணாமல் போன பத்திரங்கள் சென்னையில் கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்பாகவும், காணாமல்போன ஆவணங்கள், பொருட்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை காலை 10 மணி அளவில் தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading