கேரளாவில் நடந்த இரட்டை நரபலி சம்பவத்தில் கொலை செய்தவர்களை அணுஅணுவாக சித்திரவதை படுத்து கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் நாள்தோறும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பத்மா மற்றும் ரோஸ்லி ஆகியோரை நரபலி கொடுப்பதற்கு முன்பு, மிகவும் கொடூரமான முறையில் அவர்கள் சித்ரவதை செய்து உள்ளனர். உயிருடன் உடலை கத்தியால் கீறி அதில் கறி மசாலா தடவி கொடுமைப்படுத்தி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் 3 பேரையும் தனித்தனியாகவும், ஒன்றாக வைத்தும் விசாரணை
நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
நரபலி கொடுப்பதற்கு முன்பு முகமது ஷாபி அடிக்கடி பகவல் சிங்கின் வீட்டுக்கு வந்து சென்று உள்ளார். அப்போது பகவல் சிங் மனைவி லைலாவிடம் தான் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஏற்கனவே கொலை செய்ததாகவும், அந்த பெண்ணின் மாமிசத்தை விற்பனை செய்ததில் 20 லட்சம் வரை கிடைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முகமது ஷபிக்கு 3 பெண்களின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி அதன் மூலம் பகவல் சிங்கை ஏமாற்றி உள்ளார். நரபலி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர் தம்பதி மற்றும் மந்திரவாதியிடம் இருந்து நாள்தோறும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.