கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூச்சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்பவர் சிகிச்சை பலினின்றி இன்று உயிரிழந்தார் . இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.







