மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ஊக்கத் தொகை அளிப்பதாக தான் அறிவித்த திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பி அடித்திருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மிண்ட் தங்க சாலையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரைக் பொதுகூட்டம் நடைபெற்றது.
பரப்புரைக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர வருமாறு காங்கிரஸ் ஏன் அழைத்தது என்றும் தன்னுடைய கூட்டணி வெல்லாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதற்கு பதலடிகொடுத்து பேசினார். மேலும் தான் குடும்ப தலைவிகளுக்காக அறிவித்த திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்படியே மீண்டும் தன்னுடைய திட்டம் போல் சொல்லி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய கட்சி சார்பில் ‘நாமே தீர்வு’ என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொள்ளப்படுவதை கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார். அதையே ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ என்று மாற்றி பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தண்ணீரே போகாத வீராணம் குழாயில் இருந்து ஊழல் தொடங்கியதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டினார். ஏழு உறுதி மொழி உட்பட தான் அறிவிக்கும் பரப்புரை பிரகடனங்களை திமுக காப்பி அடிப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.







