வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 25ம் தேதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகிற ஜூன் 25ம் தேதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தலைவர் கமல் ஹாசன் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.