முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம் | அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்!

சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி. ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் விஷச்சாரய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் குறித்து விவாதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினரை சஸ்பென்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்தும், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக MLAக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை ராஜரத்தினம் அரங்கம் முன்பு இன்று அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மாணவர்களுக்கு குட் நியூஸ்… ஆப்பிளின் ‘Back to School’ சலுகை தொடங்கியாச்சு…

Web Editor

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக விரைவில் டெண்டர்; கே.என்.நேரு

G SaravanaKumar

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் இட சொல்லிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading