கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் – விசாரணை நடத்த காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவு

கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு  சென்னை மாநகர காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள்…

கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு  சென்னை மாநகர காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர்  ஏராளமான மாணவிகளுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த புகார்கள் அதிக அளவில் பகிரப்பட்டன.

இது தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்ற தேசிய மகளிர் ஆணையம் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து புகார் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையும் படியுங்கள்: கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 : வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி

இந்த நிலையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவரின் பெயரில் சமூக வலைதளத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட மாணவி அதுபோல எந்த விதமான பாலியல் தொந்தரவும் தனக்கு கொடுக்கப்படவில்லை என்றும் ஆசிரியர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும்  சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாணவியின் புகாரை பெற்று அது குறித்தும் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.