மதுரை அருகே நகைக்கடை அதிபரை கத்தியை காட்டி மிரட்டி இரண்டரை கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வடக்கு மாசி வீதி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் மதுரையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடை ஊழியர் கோவிந்தராஜ் மற்றும் ஓட்டுநர் பிரவீன்குமார் ஆகியோருடன், 2.5 கோடி ரூபாய் பணத்துடன் நாகர்கோவில் சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, உடல் உபாதை கழிப்பதற்காக கோவிந்தராஜும், பிரவீன்குமாரும் சாலையோரம் காரை நிறுத்தியுள்ளனர்.
அங்கு வந்த மர்மநபர்கள், தர்மராஜை கத்தியை காட்டி மிரட்டி, காரில் இருந்த பணத்துடன் கடத்தி சென்றுள்ளனர். மேலும், தர்மராஜ் அணிந்திருந்த ஒரு சவரன் மோதிரம், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்து கொண்டு அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பான புகாரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஓட்டுநர் பிரவீன்குமார் தகவலின்பேரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கொள்ளையில் தொடர்புடைய அலெக்ஸ் பாண்டியன், அருண்குமார் மற்றும் ஓட்டுநர் பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 2.5 கோடி ரூபாய் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.