20 ஓவர் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இருந்து ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார்.
7 வது டி-20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் மும்மரமாக தயாராகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக நடந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த ஆண்டு டி-20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ,இந்தியா, இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா , பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே போன்ற 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை தொடர்க்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அணியில் இருந்து அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜோசன் ராய் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர் பில் சாட்லரை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.