ஐபிஎல் டி20 தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத், பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 பங்கேற்று விளையாடி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 60-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இதையும் படியுங்கள் : கிராண்ட் செஸ் டூர் தொடர் – மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் கிரான்மாஸ்டர் பிரக்ஞானந்தா!
இந்நிலையில், ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் அரங்கேர உள்ளது. அதில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளது. இதில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துவிடும்.