மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி வாகை சூடியதன் மூலம் கொல்கத்தா அணி ஃபிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததுள்ளது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் எந்த நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என தீவிரமாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 60வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் மழையின் காரணமாக 7 மணிக்கு போடப்படும் டாஸ் நேற்று 9 மணிக்கு போடப்பட்டதால் போட்டி 16 ஓவர்களாக சுருக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியும் தாமதமாக தொடங்கப்பட்டது.
https://x.com/IPL/status/1789323617085345921
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சால்ட் மற்றும் நரேன் ஆகியோர் களமிறங்கிய நிலையில் பும்ராவின் பந்தில் நரேன் போல்டாகி வந்த வேகத்தில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து சால்ட்டும் ஒற்றை இலக்க ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து நரேஷ் அய்யர் மற்றும் நிதிஷ் ரானா ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை அதிகரிக்கச் செய்தனர். 16ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்களை இழந்து 157ரன்கள் குவித்தது.
158ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ரொஹித் சர்மா சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இஷான் கிஷன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். திலக் வர்மாவைத் தவிர இதர வீரர்கள் அனைவருன் ரன்களை குவிக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 16ஓவர்களில் 8விக்கெட்களை இழந்து 139 மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் கொல்கத்தா அணி 18ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. நேற்றைய போட்டியின் வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.