உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வருடாந்திர விமானப்படை நாள் அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய விமானப்படையின் 91-வது ஆண்டு விழா, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாம்ராலி விமானப்படை நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் விமான சாகசங்களும், பாராசூட் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியை விமானப்படை வீரர்களின் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விழாவில் இந்திய விமானப்படையின் மதிப்புகளை சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய விமானப்படைக்கு ஒரு புதிய கொடி உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி இந்த புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த புதிய கொடியில், அசோக சின்னமும், அதன் கீழே தேவநாகரியில் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற வார்த்தைகளுடன் அசோக சிங்கம் உள்ளது. அசோக சிங்கத்தின் கீழே இறக்கைகளை விரித்தபடி பறக்கும் இமயமலைக் கழுகின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இது விமானப்படையின் போர் குணங்களைக் குறிக்கிறது. வெளிர் நீல நிறத்தில் ஒரு மோதிரம் இமயமலைக் கழுகைச் சுற்றி ‘பாரதிய வாயு சேனா’ என்ற வார்த்தைகளைக் கொண்டுள்ளது.
இமயமலை கழுகுக்கு கீழே தேவநாகரியில் ‘மகிமையுடன் வானத்தைத் தொடவும்’ என்ற விமானப்படை பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பொன்மொழியானது பகவத் கீதையின் 24வது அத்தியாயம், 11வது பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் புதிய கொடி, ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் மூலம் வானில் பறக்கவிடப்பட்டது.