முக்கியச் செய்திகள்தமிழகம்

பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டும்-சீமான் வேண்டுகோள்

பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டுமென உலகப் பழங்குடியினர் நாளில் உளமார உறுதி ஏற்போம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பழங்குடியினர் மானுட இனத்தின் முதல் மாந்தர் மட்டுமல்லர்; மனித இனத்தின் ஆதி மூல அடிச்சுவடுகள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தாம் பிறந்த பூமியை தாய் மடியாய் போற்றி, துளியும் சிதைக்காமல், வளக் கொள்ளை என்ற பெயரில் காயப்படுத்தாமல், இயற்கை அன்னையை அறிவியல் உளிக் கொண்டு இடறாமல் எளிய வாழ்வு வாழும் முது குடியினர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுத்து வாழ்ந்த தமிழர் வரலாற்றின் மூத்த ஆணி வேர் குறவர் குடிமக்கள். உலகம் முழுக்கப் பல நாடுகளில் சிறு சிறு இனக் கூட்டமாகச் சிதறி வாழ்ந்தாலும் அவர்கள்தான் மானுட தோற்றத்தின் மகத்தான தொட்டில்கள்.

காலங்காலமாய் வாழ்ந்து வந்த வனம் இழந்து, நிலமிழந்து, உரிமைகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு, விளிம்பு நிலையில் நலிந்த மக்களாய் வாழும் ஒவ்வொரு பழங்குடி மூத்தோனையும் காத்து, அவர்களது உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டுமென உலகப் பழங்குடியினர் நாளில் உளமார உறுதி ஏற்போம்! என்று அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கோவின் இணையதளம் குறித்து இன்று சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

Vandhana

ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி – நடப்பு தொடரிலிருந்து வெளியேறிய RCB அணி.!

Web Editor

“நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading