முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்… தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு உயா்ந்துள்ளதாக நீர் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நீர் வளத்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் களஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆய்வு கிணறு அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் அளவு ஆய்வு செய்யப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கடந்த அக்டோபரில் நடத்திய ஆய்வின்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அளவு சற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக கன்னியாகுமாரியில் 2.44 மீட்டரும், விழுப்புரத்தில் 1.35 மீட்டரும், திருவண்ணாமலையில் 1.81 மீ அளவுக்கு நிலத்தடி நீர் அளவு உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை நீடிக்கும் நிலையில், தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக தொடரும் சோதனை…

Web Editor

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு!

Web Editor

ஒலிம்பியாவில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால காளை சிலை!

Niruban Chakkaaravarthi

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading