காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், ஆறு போலீசாருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு விக்னேஷ் அழைத்து செல்லப்பட்ட நிலையில், மறுநாள் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை செயலக காலனி காவலர் பவுன்ராஜ், தலைமை காவர் முனாப், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக்,
ஆயுதப்படை போலீசார் ஜெகஜீவன்ராம், சந்திரகுமார், ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலை குற்றச்சாட்டு மற்றும் வன்கொடுமை தடைச் சட்டப்பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற
நீதிபதி அல்லி முன், சிபிசிஐடி போலீசார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி தாக்கல் செய்துள்ளார். 127 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 290 ஆவணங்களுடன் சேர்த்து, 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 64 சான்று பொருட்கள் குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன.