இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார் – ரசிகர்கள் இரங்கல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி (77) காலமானார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 1967 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் விளையாடியவர் பிஷன் சிங்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி (77) காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 1967 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் விளையாடியவர் பிஷன் சிங் பேடி. சுமார் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிஷன் சிங், இந்திய சுழற்பந்துவீச்சின் அடித்தளத்தை கட்டமைத்தவராக கருதப்படுகிறார். டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

22 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள பிஷன் சிங் பேடி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு கடந்த 1970-ம் ஆண்டு  ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது.

இதையும் படியுங்கள் : இன்று வெளியாகிறது ‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் – படக்குழு அறிவிப்பு..!

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிஷன் சிங் பேடி, தனது 77வது வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘பிஷன் சிங் பேடியின் மறைவு கிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பு’ என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.