ஆப்கானிஸ்தானில் இருந்து 120 பயணிகளுடன் இந்தியாவிற்கு ராணுவ விமானம் புறப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. அரசுபடைகளுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் இருந்ததால், தலிபான்களால் ஆப்கனின் எந்த பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், தற்போது அமெரிக்க படைகள் அங்கிருந்து விலக்கிக்கொள்ள்ப்படடன. இதனால், தலிபான்கள் தீவிரமாக தாக்குதல் நடத்தி ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து முதற்கட்டமாக ஆப்கனில் இருந்து 129 இந்தியர்கள் நேற்று முன்தினம் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, மேலும் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு 2 விமானங்களை அனுப்புவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. ஆனால், ஆப்கானில் இருந்து வெளியேற மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்ததால், நிலமையை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க ராணுவம் அங்கு துப்பாக்கி சூடு நிகழ்த்தியது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆப்கானில் இருந்து விமானங்கள் புறப்படவும் தடைவிதிக்கப்பட்டது. இதனால், 2 விமானங்களையும் ரத்து செய்தது ஏர் இந்தியா.
இந்நிலையில், மீண்டும் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், காபூலில் இருந்து 120 இந்தியர்களுடன் ராணுவத்துக்கு சொந்தமான C-17 விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அசாதர சூழலை கருத்தில் கொண்டு இந்திய தூதரகத்தை மூட உள்ளதாகவும், அதனால், அங்கிருக்கும் அதிகாரிகள் அனைவரும் இந்தியா அழைக்கப்படுவார்கள் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கனிலிருந்து இந்தியா வருவதற்கு e- emergency X misc விசா முறையில் உடனடி விசா பெற்று கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.