35.3 C
Chennai
June 16, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா! ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. அதிரடியாக ஆடிசதமடித்தார் ரோஹித் சர்மா.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என தொடரை கைப்பற்றியது. இன்று மூன்றாவது, கடைசி போட்டி பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை அடுத்து பேட்டிங்கில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்தார். இவர் 69 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிங்கு சிங் 69. ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் ரஹமதுல்லாவும், இப்ராஹிமும் தலா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இரவு 10 மணி நிலவரப்படி, 14 ஓவர்கள் முடிவில் 140 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கன் வீரர்கள் குல்பதீன் மற்றும் முகமது நபி விளையாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading