நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,134. பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா 2-வது அலை பாதிப்பு எண்ணிக்கை இப்போது சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 40,134. பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 36,946 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை 3,08,57,467 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 4,13,718 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,16,95,958 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், தொற்று பாதிப்பால் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரி ழந்தோர் எண்ணிக்கை 4,24,773 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 47,22,23,639 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 17,06,598. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.