இந்தியாவில் புதிதாக 26,964 பேருக்கு கொரோனா : 383 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,964 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களை வாட்டி வதக்கும் கொரோனா கொடூரம், கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்தது. பிறகு மீண்டும்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,964 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களை வாட்டி வதக்கும் கொரோனா கொடூரம், கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்தது. பிறகு மீண்டும் அதிகரித்தது. ஏற்ற இறக்கமாக இருந்து வந்த கொரோ னா, இப்போது குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த தொற்றால் 26,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 383 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,768 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,167 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,83,741 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தொற்றுக்கு 3,01,989 பேர் இப்போது சிகிச் சை பெற்று வருகின்றனர். கடந்த 186 நாட்களில் இது குறைந்த எண்ணிக்கையாகும்.

இந்தியாவில் இதுவரை 82,65,15,754 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.