சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் கடலில் மூழ்கி உயிர் இழப்பது குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புதிய கண்காணிப்பு அறை மற்றும் மெரினாவில் 4 காவல் உதவி மையங்களை…

சென்னையில் கடலில் மூழ்கி உயிர் இழப்பது குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புதிய கண்காணிப்பு அறை மற்றும் மெரினாவில் 4 காவல் உதவி மையங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னையில் கடற்கரையில் உயிர் இழப்பு குறைந்துள்ளது. இன்னும் கூடுதலாக ட்ரோன் கேமரா வந்ததும்  உயிர் இழப்பு முழுமையாக குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி கடற்கரையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் மெரினா கடற்கரை மணல் பரப்பில் குதிரைப்படை மற்றும் 4 காவல் உதவி மையங்கள் அமைத்து கண்காணிக்க உள்ளதாகவும் போலீஸ் ரோந்து வாகனம் மூலமாக கண்காணிக்க உள்ளதாகவும் கூறினார்.

சென்னை கடற்கரையையொட்டி உள்ள பகுதியை ட்ரோன் யூனிட் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பொது மக்கள் தங்கள் குழந்தைகளை கடற்கரை மணல் பரப்பிற்கு அழைத்து வரும்போது  காணாமல் போனால் உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.