முக்கியச் செய்திகள் தமிழகம்

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்வு

சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பி வருவதால், உபரி நீர் திறக்கப் பட்டது. இன்று காலை 11 மணியளவில் புழல் ஏரி திறக்கப்பட்டது. முதலில் 1500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் 2000 கன அடி உபரிநீரை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதே போல செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரம் கன அடி நீர் இப்போது திறக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எல்பிஜி சிலிண்டர்கள் விலை உயர்வு- திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

Web Editor

இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த புலி உயிரிழப்பு

G SaravanaKumar

அதிகரிக்கும் கொரோனா; ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை

G SaravanaKumar