இந்தியா செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவையொட்டி ரூ.75 நாணயம்!

நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவையொட்டி, ரூ.75 மதிப்பிலான நாணயம் வெளியிடப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அதன் திறப்பு விழா வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததற்கு  கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, 75 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், நாணயம் (Issue Of Commemorative Coin on the occasion of Inauguration of New Parliament Building) விதிகள், 2023-ன் கீழ் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அறிக்கையில், ”நாணயத்தின் விட்டம் 44 மிமீ மற்றும் அது 200 செர்ஷன்களைக் கொண்டிருக்கும். நாணயம் 50% வெள்ளி, 40% செம்பு, 5% நிக்கல் மற்றும் 5% துத்தநாகம் ஆகியவை கொண்டு உருவாக்கப்படும். இதன் ஒரு புறத்தில் சிங்க லச்சினையும் அதன் கீழ் ‘சத்யமேவ ஜெயதே’ என ஹிந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும், இடது சுற்றளவில் ‘பாரத்’ என்று தேவநாகரி எழுத்துக்களிலும், வலது சுற்றளவில் ஆங்கிலத்தில் ‘இந்தியா’ எனவும் இடம் பெற்றிருக்கும்.

நாணயத்தின் பின்புறம் நாடாளுமன்ற வளாகத்தின் படம் இருக்கும். “சன்சாத் ஸ்னகுல்’ என்ற எழுத்து மேல் சுற்றளவில் தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்தில் ‘Parliament Complex’ என்று நாணயத்தின் கீழ் சுற்றளவில் எழுதப்பட்டிருக்கும். நாணயத்தின் எடை 35 கிராம் அளவில் இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கண்கவர் அணிவகுப்புகளுடன் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

G SaravanaKumar

இளையராஜா பாடலுடன் Send Off செய்த நண்பர்கள்..

Niruban Chakkaaravarthi

லலித் மோடியுடன் நட்புறவில் சுஷ்மிதா சென்

Mohan Dass