கடந்த ஓராண்டில் பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்த 3,425 குழந்தைகள் மீட்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
திட்டக்குடி கணேசன் தெரிவித்துள்ளார்.
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி
கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா நகர் டவர்
பூங்காவில் தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஏற்படுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் சினிமா பிரபலங்கள் இளவரசு, போஸ் வெங்கட், பிளாக் பாண்டி, ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கடந்த ஓராண்டில் மட்டும் 3,425 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
வறுமை இருப்பதால்தான் தங்கள் குழந்தைகளை பல்வேறு பணிகளில் பெற்றோர்கள்
ஈடுபடுத்துவதாகவும் அதனைத் தடுப்பதற்காக மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்
திட்டத்தை முதலமைச்சர் அறிவித்து இருப்பதாகவும் அமைச்சர் திட்டக்குடி கணேசன்
கூறினார். மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் 60 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள்
நடத்தி 80 ஆயிரத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் தமிழகத்தில்
உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
-மணிகண்டன்