கொரோனாவில் இருந்து குணமடைவோர் 95% ஆக அதிகரிப்பு

இந்நியாவில் 75 நாட்களுக்கு பிறகு கொரோனா நோய்த்தொற்றின் தினசரி பாதிப்பு 60 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாத 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…

இந்நியாவில் 75 நாட்களுக்கு பிறகு கொரோனா நோய்த்தொற்றின் தினசரி பாதிப்பு 60 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாத 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 75 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரமாக குறைந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிச்சைப் பெற்று வந்த 1,17,525 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,82,80,472 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தவர்கள் 95.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 2726 ஆக பதிவாகியுள்ளது. உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆகும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9,13,378 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.