”திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் பாதுகாக்கப்படுவதில்லை”- அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் நேர்மையான ஆட்சியாளர்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாமக்கலில் மணல் மாபியாவை தடுத்ததால் கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு திமுக அரசு நேர்மையான அதிகாரிகள் பாதுகாக்கப்படுவதில்லை என்று குற்றம் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கிராம நிர்வாக அதிகாரி (VAO) தனது வீட்டில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். தனது அதிகார வரம்பில் சட்டவிரோத மணல் அள்ளுவதை எதிர்த்துப் போராடி தடுத்ததேஅவர் செய்த ஒரே “குற்றம்” . இன்று தமிழ்நாட்டில் ஒரு நேர்மையான அதிகாரிக்குக் கிடைக்கும் கொடூரமான “வெகுமதி” இதுதான்.

இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல; மணல் மாஃபியா, போதைப்பொருள் மாஃபியா அல்லது நில அபகரிப்பாளர்களுக்கு எதிராகப் பேசத் துணியும் அரசு அதிகாரிகளும், சாதாரண குடிமக்களும் கூட வன்முறையால் வாயடைக்கப்படுகிறார்கள்.

திமுக ஆட்சியில், எதுவும் சட்டப்பூர்வமானது அல்ல, எதுவும் பாதுகாப்பாக இல்லை, நேர்மையான அதிகாரி யாரும் பாதுகாக்கப்படுவதில்லை. சட்டமீறல் ஆட்சியாகிவிட்டது, குண்டர்கள் ஆட்சி புதிய வழக்கமாகிவிட்டது”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.