முக்கியச் செய்திகள் செய்திகள்

தொடர் மழை: 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் கிழக்கு வங்க கடல் முதல், தமிழ்நாடு கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 12- ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக இருக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், கடலூர், நாகை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

AI Chatbot சிக்கலால் சுந்தர் பிச்சை எடுத்த அதிரடி முடிவு! மீளுமா Google!

Web Editor

இனி ஜாலி தான்… காரில் பயணம் செய்ய அறிமுகமாகும் குழந்தைகளுக்கான பிரத்யேக சீட்!

Jayasheeba

தமிழ்நாட்டில் இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தவில்லையா?

EZHILARASAN D