அதானி குழும நிறுவனங்கள் மீது, ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி அறிக்கை வெளியான ஒரு மாதத்தில் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியது. செயற்கையாக பங்குகளின் மதிப்பை அதிகரிப்பது, தவறான அறிக்கையை தருதல் என அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது. ஆனாலும், முதலீட்டாளர்கள் பங்குகளை திரும்பப் பெற்றதால், மும்பை பங்குச் சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிவடைந்தது. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, 26வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் ஏர் இந்தியா!
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான ஜனவரி 24 ஆம் தேதியிலிருந்து, கடந்த ஒரு மாதத்தில், அதானி நிறுவனங்களின மொத்த சந்தை மதிப்பு சுமார் 12 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்து, 7.5 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. மேலும், ஒரு மாதத்திற்குள் அதானி பங்குகள் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.