28.3 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சபரிமலை கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள், தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லையில் பதிவு செய்த பிறகே ஐயப்ப பக்தர்களுக்கு சாமி தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பதிவு செய்ததாகவும் சனிக்கிழமை 42,354 பக்தரகள் பதிவு செய்ததாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் மேல் கோயிலுக்கு வருவாய் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading