நடிகர் மகா காந்தி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த நடிகர் மகா காந்தி சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கடந்த மாதம் 2ஆம் தேதி, மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது, நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தபோது, அதனை ஏற்க மறுத்து, விஜய் சேதுபதி பொதுவெளியில், தம்மை இழிவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிங்க: பெங்களூரு: விஜய் சேதுபதி மீது தாக்குதல்
பின்னர், விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தம் மீது, விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன், காதில் அறைந்ததாகவும் இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உண்மை இவ்வாறிருக்க, கடந்த மாதம் 3ஆம் தேதி, விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக அவரது தரப்பில், அவதூறு பரப்பு வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்ட சென்ற தம்மை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பான செய்தியாக மாற்றியதற்காக, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இந்த மனு இந்த வாரம் விசாரணைக்கு வரும். என தெரிகிறது.
இதற்கிடையே, நடிகர் மகாகாந்தி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளதாக நடிகர் விஜய்சேதுபதியின் வழக்கறிஞர் நர்மதா சம்பத் தெரிவித்துள்ளார். பெங்களூரு விமான நிலைய சம்பவத்தில், எந்த புகாரும் வேண்டாம் என காவல்நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு, தற்போது விஜய்சேதுபதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.