சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்தது. நேற்று இரவு முதல் மழை சற்று குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் சென்னையில் இரவு இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. இதனால் சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், அடையாறு, பெரம்யூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நாளை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.








