கன்னியாகுமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகள் மற்றும் குலசேகரம், திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் வெளுத்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் கனமழையும், சாரல் மழையும்
தொடர்ச்சியாக பெய்து வருகிறது . குறிப்பாக கடந்த வாரம் பெய்த கனமழையால்
அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது, ஆறுகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது .
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று தணிந்திருந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய துவங்கியுள்ளது . குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளான கோதையாறு, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளிலும், இதே போல நிலப்பரப்புகளான குலசேகரம், சித்திரங்கோடு, திருவட்டார், ஆறூர் அருமனை, ஆறுகாணிமார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது .
இதனால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்டத்தில் மீண்டும் கனமழை துவங்கியதால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.







