30 C
Chennai
April 25, 2024
குற்றம் தமிழகம் செய்திகள்

சென்னையில் ஹெராயின் விற்க முயன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை!

சென்னையில் அரை கிலோ ஹொராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை புரசைவாக்கத்தில் ராஜஸ்தானை சேர்ந்த ராஜூ ராம் விஷ்னோய் என்பவர் 500 கிராம் ஹெராயினை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாக்திலுள்ள சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குக்கான சிறப்பு நீதிபதி சி. திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜெ. சரவணன் ஆஜராகி வாதாடினார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், 500 கிராம் வைத்திருப்பது என்பது வர்த்தக ரீதியிலான பயன்பாடாகத்தான் கருத வேண்டும் எனவும், ராஜூ ராம் வைத்திருந்ததை காவல்துறை நிரூபித்துள்ளதால், 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading