சென்னையில் அரை கிலோ ஹொராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை புரசைவாக்கத்தில் ராஜஸ்தானை சேர்ந்த ராஜூ ராம் விஷ்னோய் என்பவர் 500 கிராம் ஹெராயினை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாக்திலுள்ள சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குக்கான சிறப்பு நீதிபதி சி. திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜெ. சரவணன் ஆஜராகி வாதாடினார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், 500 கிராம் வைத்திருப்பது என்பது வர்த்தக ரீதியிலான பயன்பாடாகத்தான் கருத வேண்டும் எனவும், ராஜூ ராம் வைத்திருந்ததை காவல்துறை நிரூபித்துள்ளதால், 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—அனகா காளமேகன்