பல்லடம் அருகே சாலையோரமாக 2 டன்னுக்கும் மேலான பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாதக்கணக்கான குப்பைகளை கொட்டி மாதத்திற்கு ஒரு முறை தீ வைக்கும் நிகழ்வு வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று முப்பது நாட்களுக்கும் மேலாககொட்டி வைக்கப்பட்டிருந்த மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், துணி கழிவுகள் உட்பட்ட 2 டன்னுக்கு மேல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீவைக்கப்பட்டதால் 3 மணி நேரத்துக்கு மேலாக தீ கரும்புகையுடன் எரிந்தது. குப்பைக்கு எரித்த தீயிலிருந்த வெளியேறிய கரும்புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் குப்பைக்கு வைக்கப்பட்டிருந்து தீயை தண்ணீரை பீச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே ஊராட்சி நிர்வாகத்தினர் 2 டன்னுக்கு மேல் குப்பைகளுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
—அனகா காளமேகன்







