ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 135 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் கைகோர்த்த சாஹா – ஹர்திக் பாண்டியா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தது.
இதையும் படியுங்கள் : நாட்டில் ஒரே நாளில் 12,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
சாஹா 47 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த அபினவ் மனோஹரும் 3 ரன்களில் வெளியேறினார். விஜய் சங்கர், டேவிட் மில்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஹர்திக் பாண்டியா 66 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இறுதியாக, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணிக்கு 136 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.