நைஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதைப் போல் நைஜீரியாவிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன. இந்த நோட்டுக்களை, வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள ஜனவரி 31ம் தேதியை கடைசி நாளாக அறிவித்த நிலையில், பிப்ரவரி 20ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், அங்குள்ள வங்கிகளில் புதிய நைரா நோட்டுகள் போதுமான அளவில் இல்லாததால் நைஜீரிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையும் படியுங்கள் : ”ஓபிஎஸ் இனி சிங்கப்பாதையை நோக்கி பயணிப்பார்” – ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்
மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு வங்கிகள் விதித்துள்ளன. இதனால் பணப்புழக்கம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
பல இடங்களில் நைஜீரிய மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களை அடித்து நொறுக்கி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.