காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் வழங்கி ராய்ப்பூரில் நடைபெற்று வரும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக இந்தக் கூட்டம் கூடியுள்ளது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்று இணைப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே தலைவாரக தேர்வு செய்யப்பட்டார். மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டாா். ராகுல்காந்தியின் நடைபயணத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அருணாசலப்பிரதேசம் முதல் குஜராத் வரையில் நடைபயணம் மேற்கொள்வதற்கான தீர்மானம் காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
முதல் நாளான இன்று மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில், காங்கிரஸின் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய, காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் வழங்க ஒருமனதாக முடிவு செய்தது. இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, ராய்ப்பூர் மாநாடு காங்கிரஸுக்கு வழிகாட்டும் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.