முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்: மு.க.ஸ்டாலின்

போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை மாதவரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி எப்போதும் அரசு ஊழியர்களின் பொற்கால ஆட்சி என்றார். மேலும் அரசு ஊழியர்கள் இல்லாவிட்டால் அரசாங்கமே இருக்காது எனவும் அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம் என்றும் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாநாட்டில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய் அல்லது செத்துமடி என்பது தனது கொள்கை அல்ல, செய்து முடித்துவிட்டு மடிய வேண்டும் என்பதே தனது கொள்கை எனக் கூறினார். பின்பு போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் எனவும் ஒழுங்கு நடவடிக்கை மூலம் பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உக்ரைன் தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும்: பைடன்

Halley Karthik

பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

Halley Karthik

இடி தாக்கியதில் செல்போன் வெடித்து பிளம்பர் பலி

EZHILARASAN D