அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், கோடை விடுமுறைக்குப்…

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், கோடை விடுமுறைக்குப்
பின் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் வரும் கல்வி ஆண்டுக்கான ( 2022-23 ) வகுப்புகள் தொடங்க உள்ளன.

வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11ஆம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.  இடைப்பட்ட வகுப்புகளான 2, 3, 4, 7, 8, 10 ஆகியவற்றுக்கும் ஜூன் 13ஆம் தேதியே
சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின்போதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
முடிவடைந்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் தாமதமாகத் தொடங்கும் சேர்க்கையால் மாணவர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.