முக்கியச் செய்திகள்குற்றம்தமிழகம்

துபாயிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மிக்ஸியில் மறைத்து கடத்தி கொண்டு வரப்பட்ட 2 கிலோ 579 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

திருச்சியில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.  அச்சேவையை பயன்படுத்தும் பயணிகளிடம்,  ‘சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்கள் தொடர்பான சோதனை’ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.  அப்படி இன்றும் துபாயியிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவ்வாறு அதிகாரிகள் நடத்திய சோதனையில்,  ஜூஸ் மிக்சர் மற்றும் உணவு தயாரிக்கும் இயந்திரத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.  இதனையடுத்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி மதிப்பிலான 2.579 கிராம் தங்கத்தை  சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.   தொடர்ந்து இது தொடர்பாக பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

இந்தியாவில் புதிதாக 11,903 பேருக்கு கொரோனா

Halley Karthik

குரூப் 4 தேர்வு; வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வர்கள்

G SaravanaKumar

”இது தோல்வி அல்ல; வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம்” – செல்லூர் ராஜூ

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading